உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.